Sunday, March 8, 2015

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன். அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது. அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன். கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது. எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான். அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும். என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை. இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி எங்கோ நகரத் தொடங்கியது. நான் தலை கீழாக மாறிவிட்டேன். அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது. இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது. ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன். திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது. சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன். இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன். யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது. ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள். இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது. கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன். ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள். அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று. தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள். என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள். அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை. அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை. என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள். நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது. கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல். அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன். அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை. எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள் என்னைத் தூக்குகிறது. தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,. மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில். அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை. அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன். நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள். எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை... என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று.....

Saturday, March 7, 2015


கிரிக்கெட்

தெரிந்த செய்தி
தெரியாத உண்மைகள்

உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டின் அள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின் சார்பில் வீரர்களை தேர்வு செய்வார்கள். இந்தியாவை தவிர இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற தனியார் அமைப்பு தான் இந்திய வீரர்களை தேர்வு செய்யும். இதில் இந்திய அரசாங்கத்தின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் கூட தலையிட முடியாது. காரணம் அந்த தனியார் அமைப்பின் விதி அப்படி! கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்தும் அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல. மாறாக உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றால் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் கோடி கோடியாக வீரர்களுக்கு பரிசாக கொட்டி கொடுப்பார். ஒரு அரசாங்க ஊழியர். இன்னொரு அரசு துறை யிலே அல்லது வேறு தனியார் நிறுவனத்திலே பணி செய்ய இயலாது. ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர் அனைவருக்கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள். மற்றும் பல தனியார் நிறுவனத்தில் கௌரவத் தலைவராக இருந்த கொண்டு தனி ஊதியம் பெறுவார்கள். இவற்றுக்கு மேலாக ஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டு விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிப்பார்கள் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன் இம்ரான்கான் மற்றும் அப்ரிடி அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் கிடைத்த வருவாய் கொண்டு அவர் அவர் சொந்த ஊரில் ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண்டு மருத்துவமனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக கட்டி உள்ளார்கள். முறையான வருமான வரி செலுத்துபவர் என்று மார் தட்டி கொள்ளும் தெண்டுல்கரும், உலகின் முதல் நிலை பணக்கார விளையாட்டு வீரர் தோனி யும் இந்திய மக்களுக்கு செய்த கைமாறு என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களுக்கு தொலைக்காட்சி யில் கை தட்டி ரசிப்பது? நாங்கள் கை தட்டி ரசிப்பது உங்களை அல்ல. உங்கள் பனியன் மீது இருக்கும் எங்கள் தேசத்தின் பெயருக்காக!!

Friday, March 6, 2015

ஒருவனின் கவிதை அல்ல

முதல்வர் அவர்களே ... 🙏💐👏 ஆன்மிகம் தேட வேண்டாம் அன்னதானம் போட வேண்டாம் மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த மகேஸ்வரனே உங்களை வணங்குவார் .. இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வோம் குடிப்பதை வைத்து என்ன வளர்ச்சி ? வேரிலே விசமென்றால் ஏது மலர்ச்சி ? ஊற்றில் விடத்தை கலந்து ஊருக்கு அனுப்பி என்ன பயன் ? நாற்றை எல்லாம் கருக விட்டு வேலியை கட்டி என்ன பயன் ? மனமும் உடலும் கெடுத்தபின் மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ? குளத்தில் நீரை கெடுத்து விட்டு குடத்தை வாங்கி என்ன பயன் ? சமுதாயமே சீரழிந்த பின் சாலையும் ஆலையும் எதற்கு ? தமிழகத்தில் எல்லா சாலைகளும் சுடுகாடு நோக்கி போகிறது . உடலும் மனமும் போதையிலே நாடே வீணாய் ஆகிறது.. மாநிலம் , வசதியாக இல்லையெனும் பரவாயில்லை -தமிழினம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் .. ஒருவனின் கவிதை அல்ல ஒரு இனத்தின் அழுகை...

Thursday, March 5, 2015

80 வயது சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி


80 வயது சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி
ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச்.6-அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 80), கடந்த 1999-2005-ம் ஆண்டுகளில் அரியானாவில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். அங்கு 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நியமனத்தில் ஏராளமான முறைகேடு நடந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்தும், ஆவணங்களை திருத்தியும் ஏராளமானோரை பணி நியமனம் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.55 பேர் மீது வழக்குநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஆசிரியர் தேர்வு ஊழல் விவகாரத்தில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 44 பேருக்கு தலா 4 ஆண்டுகளும், ஒருவருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஐகோர்ட்டில் மேல்முறையீடுஆனால் தனது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி ஐகோர்ட்டில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மேல்முறையீடு செய்தார். மேலும் அவரது மகன் அஜய் சவுதாலா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டு சிறை உறுதிஇதில் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை ஐகோர்ட்டு நீதிபதி சித்தார்த் மிரிதுல் உறுதி செய்தார். மேலும் சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோருக்கும் விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.மேலும் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும், சஞ்சீவ் குமாருக்கும் நீதிபதி தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். மற்ற 3 பேருக்கும் தலா ரூ.1,300 அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தார்.இந்த வழக்கில் மற்ற 50 பேருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய தண்டனை காலம் 2 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, குற்றம் புரியும் வகையில் அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.கருணை காட்ட மறுப்புமுதியவரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட வாதத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பின் போது நீதிபதி சித்தார்த் மிரிதுல் கூறினார். அரியானாவின் முதல்-மந்திரியாக பதவி வகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், முன்னுதாரணமாகவும் விளங்கி இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவர்களை ஏமாற்றிவிட்டார் என்றும் அப்போது நீதிபதி குறிப்பிட்டார்.இழிவுபடுத்தி விட்டனர்அரியானாவில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழல் மூலம், ஆசிரியர்கள் நியமனத்தை குற்றவாளிகள் இழிபடுத்தி விட்டதாகவும், இத்தகைய ஊழல்கள் குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை மிகவும் குறைப்பதோடு, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார். இந்த ஊழல் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விட்டதாகவும், வேலைவாய்ப்பு இல்லாமல் காத்து இருக்கும் இளைஞர்களின் மனதில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். 


நன்றி - தினத்தந்தி 

பிகு : பெண் தெய்வமாக நினைத்துக்கொண்டிருக்கும் அம்மையாரும் அவரது பக்தர்களுக்கும் இந்த தீர்ப்பை பார்த்தார்களா ?! 

‪#‎தமிழன்டா‬.

அமெரிக்காவில் பூமிக்குக்  கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள்..."!  "எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்" என்று பெருமையோடு..."!! இரஷ்யர்கள் உடனே அவர்களும் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்..."! “எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்” என்று ஆச்சரியத்தோடு ..."!! இந்தியர்களும் தோண்டினார்கள். "500" அடி தாண்டி "1000" அடி தோண்டியும் ஒன்றும்  கிடைக்கவில்லை...! உடனே அறிவித்தார்கள்...? “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே "வயர்லெஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று திமிரோடு..."!! விடுவமா நம்ம..."! ‪#‎தமிழன்டா‬.

Wednesday, March 4, 2015

ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு?

மக்கள் தொகை: 110 கோடி இதில் 9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள் 30 கோடி மாநில அரசு பணியாளர்கள் 17 கோடி மத்திய அரசு பணியாளர்கள் (ரென்டுபேருமே வேலை செய்றதில்லை) 1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னைக்கு இந்தியாக்கு உழைச்சாங்க?) 25 கோடி பேர் பள்ளியில படிப்பவர்கள் 1 கோடிபேர் 5வயசுக்கும் கீழானவர்கள் 15 கோடி பேர் வேலை தேடுவோர் 1.2 கோடி பேர் நோயால் மருத்துவமனையில் இருப்போர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு (ஒரு புள்ளி விபரத்தின்படி) 79,99,998 பேர் ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர் மிச்சம் இருப்பது நீங்களும் நானும் நீங்க எப்ப பார்த்தாலும் what's app, Facebookல பிஸி அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

மாற்றம் வேண்டும்


நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விசயத்திருக்கும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்ற நம்மால் நம் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்பமாடின் கின்றார்கள். 

என்ன மாற்றம் உலகின் பெரியண்ணன் என்று சொல்லப்படும் அமெரிக்காவில் அதன் அதிபர் அவருடைய தனிப்பட்ட வாழ்கையில் சிறு தவறு செய்தால் கூட அடுத்த தேர்தலில் மக்கள் அவரை புறக்கணித்து விடுவார்கள். 

ஆனால் இங்கோ இவர் எனக்கு துணைவியார் இவர் என் மகளுக்கு தாய் இவர் என் மகனுக்கு தாய் என்று செம்மொழியில் கூறிக்கொண்டிருக்கும் ஒரு மஞ்சள் மாய்கானை நாம் என்னமா நக்கலா பேசுகிறார் இவரல்லவோ தலைவர் என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.

செல்வி என்று கூறிக்கொண்டிருக்கும் திருமணம் ஆகாத பெண்ணின் பேய் ஆட்டத்தை நல்ல ஆளுமைதிறன் என்று கூறி கை தட்டி புல்லரிகின்றோம்.

பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட ஒரு குடிகார  நடிகனையும் நாட்டுக்காக பாடு படுபவராகப் பார்க்கிறோம்.

மாற்றம் வேண்டும்.  ஒரு நல்ல தலைமை வேண்டும் .  சுய ஒழுக்கத்தோடு கூடிய ஒரு தலைவன் வேண்டும்.  காத்திருப்போம் விடியலுக்கு. 

நன்றி !!!