Friday, March 6, 2015

ஒருவனின் கவிதை அல்ல

முதல்வர் அவர்களே ... 🙏💐👏 ஆன்மிகம் தேட வேண்டாம் அன்னதானம் போட வேண்டாம் மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த மகேஸ்வரனே உங்களை வணங்குவார் .. இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வோம் குடிப்பதை வைத்து என்ன வளர்ச்சி ? வேரிலே விசமென்றால் ஏது மலர்ச்சி ? ஊற்றில் விடத்தை கலந்து ஊருக்கு அனுப்பி என்ன பயன் ? நாற்றை எல்லாம் கருக விட்டு வேலியை கட்டி என்ன பயன் ? மனமும் உடலும் கெடுத்தபின் மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ? குளத்தில் நீரை கெடுத்து விட்டு குடத்தை வாங்கி என்ன பயன் ? சமுதாயமே சீரழிந்த பின் சாலையும் ஆலையும் எதற்கு ? தமிழகத்தில் எல்லா சாலைகளும் சுடுகாடு நோக்கி போகிறது . உடலும் மனமும் போதையிலே நாடே வீணாய் ஆகிறது.. மாநிலம் , வசதியாக இல்லையெனும் பரவாயில்லை -தமிழினம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் .. ஒருவனின் கவிதை அல்ல ஒரு இனத்தின் அழுகை...

No comments: